Monday, September 14, 2009

அசரிரீ...


அணிந்திருந்த ஆடைகள்,
பாலின வேறுபாட்டை...
உடைத்திருந்தது...                                                    

வசித்திருக்கும் வீடு,
வாசித்தது,
இவர்களின் வசதியை...

தாழ்வாரத்தில்,
தரை இறக்கப்பட்டிருந்த,
மது பாட்டில்களும்...

நெருப்பு தின்று,
துப்பியிருந்த,
புகையிலை சாம்பல்களும்..

சுவரே நாணுகிற,
சுவரொட்டிகளும்...

வர்ணித்தது,
வாழ்கையை முறையை...

சிவப்பு விளக்கு பகுதியோ???
சிந்தையில் உதித்த,
சந்தேகத்தின் தலையை,
நண்பனின் இருப்பு,
நசுக்கி எறிந்தது...

அரை நிர்வாணத்துடன்,
அறையை விட்டு,
வெளி வருகிற,
நண்பனின் வியர்வையில்,
இன்னும் காய்ந்திருக்கவில்லை,
காமம்....

விரைவாய்,
விடைகொடுத்து விட்டு,
விரைகிறான் அவ்வறைக்குள்...

உதித்த ஒரு கேள்வியை,
புதைத்துக்கொண்டு,
கிளம்பிவிட்டேன்...

பின்னொரு நாளில்,
திருமண அழைப்பிதழுடன்,
தோன்றிய அவனை,
அது குறித்து கேட்க...

குற்ற உணர்வற்று,
கூறுகிறான்,
அன்றே ஆணுரைக்கும்,
அவளுக்கும்,
நன்றி சொல்லிவிட்டதாக...

பெரும்பாலான,
ஆணுறைகளில்,
விந்தணுவோடு,
கற்பும்,
உறைந்து கிடப்பதாய்,
காதுக்குள் அலறிக்கொண்டிருந்தது,
அசரிரீ ஒன்று...

3 comments:

Thanks for reading..