Monday, August 24, 2009

உன் எச்சில் வார்த்தைகளுடன்...


சாட்சி வைத்த,
அக்னி,
சுட்டெரிக்கும் என்றோ,

புடை சூழ்ந்த,
உறவுகள்,
புரளி பேசும் என்றோ...

கரன்சி,
உன் கையிருப்பு,
அதிகம் என்றோ...

தனிமை,
தின்ன விழையும் என்றோ...

விந்தணுக்கள்,
நிராகரிக்கப்படும் என்றோ...

மேட்டுக்குடி வாழ்வில்,
மோகம்கொண்டோ...
தொடர்ந்திருக்கவில்லை,
இவ்விவாகத்தை...

உன் கருப்பை நுழைந்த,
என் விந்தொன்று,
உருப்பெற்றதர்க்காய்...
வாழ்ந்திருக்கிறேன்,
உன் எச்சில் வார்த்தைகளுடன்...

Tuesday, August 4, 2009

தோல்வியை துப்பியவாறு...


பன்பலையின்னூடே,
கசிந்து கரைகிற பாடலில்,
லயித்து சிலிர்த்து - பின்
கிடக்கிறேன் பிரேதமென...

இழைந்தோடுகிற,
இசையின் கருப்பொருள்,
அடர்த்தியாய்,
உன் நினைவுகளை,
அவிழ்த்துவிட்டிருந்தது....

முழுவதுமாய்,
கட்டுக்குலைந்து,
உன் தளத்தில்,
சரிந்த என் நினைவை,
மீட்டெடுக்க திராணியற்று,
தொடர்ந்து ஒலிக்கிறது,
தோல்வியை துப்பியவாறு..