பெரும்பாலான,
பிரதான சாலைகளில்,
நெடுக காணமுடிகிறது,
அழுக்கை ஆடையாய் அணிந்து,
யாசிப்பவர்களை....
வயிற்று பசியினால்,
கையில் ஏந்துகிற,
தட்டை விட,
உடல் பசியின் கூடலால்,
அவள் தோளில் சுமக்கிற குழந்தை,
யாசித்தலை,
அடுத்த தலைமுறைக்கு,
அழைத்து செல்கிற,
பிரதிநிதியென்பதில் ,
கலவரப்படுகிறது,
என் ஆழ்மனது..
விளைவாக,
தவிர்க்கிறேன் ஈதலை ....
இச்செய்கையில்,
கொதிக்கிற அவள்,
என் செவி தட்டுகளில் இடுகிற,
வசைகளின் சில்லரை சப்தங்கள்,
பெரும் அதிர்வுகளோடு,
ஒலித்தபடியிருக்கின்றன....