Monday, August 24, 2009

உன் எச்சில் வார்த்தைகளுடன்...


சாட்சி வைத்த,
அக்னி,
சுட்டெரிக்கும் என்றோ,

புடை சூழ்ந்த,
உறவுகள்,
புரளி பேசும் என்றோ...

கரன்சி,
உன் கையிருப்பு,
அதிகம் என்றோ...

தனிமை,
தின்ன விழையும் என்றோ...

விந்தணுக்கள்,
நிராகரிக்கப்படும் என்றோ...

மேட்டுக்குடி வாழ்வில்,
மோகம்கொண்டோ...
தொடர்ந்திருக்கவில்லை,
இவ்விவாகத்தை...

உன் கருப்பை நுழைந்த,
என் விந்தொன்று,
உருப்பெற்றதர்க்காய்...
வாழ்ந்திருக்கிறேன்,
உன் எச்சில் வார்த்தைகளுடன்...

No comments:

Post a Comment

Thanks for reading..