Tuesday, August 4, 2009

தோல்வியை துப்பியவாறு...


பன்பலையின்னூடே,
கசிந்து கரைகிற பாடலில்,
லயித்து சிலிர்த்து - பின்
கிடக்கிறேன் பிரேதமென...

இழைந்தோடுகிற,
இசையின் கருப்பொருள்,
அடர்த்தியாய்,
உன் நினைவுகளை,
அவிழ்த்துவிட்டிருந்தது....

முழுவதுமாய்,
கட்டுக்குலைந்து,
உன் தளத்தில்,
சரிந்த என் நினைவை,
மீட்டெடுக்க திராணியற்று,
தொடர்ந்து ஒலிக்கிறது,
தோல்வியை துப்பியவாறு..