Thursday, January 7, 2010

காதல் இடைவெளிகளில் அமருவதில்லை...



காதல் உறுதிசெய்யப்பட்டு,
கண்பேசுவதாய்,
கூடிய சந்திப்புகளில்,
அமர்ந்திருக்கிறோம்,
காற்றுக்கும் இடைவெளி மறுத்தபடி..

இருப்பினும்,
இல்லாத அவ்விடைவெளிக்குள்,
அனுமதி வாங்காமலேயே,
அமர்ந்தாற்றுகிறது காதல்...

பின்னாளில்,
கருத்து வேறுபாட்டின்,

கனத்த  வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கனமும்....

பேசி தீர்ப்பதென,
முடிவு செய்யப்பட்டு,
கூடிய சந்திப்புகளில்,
மௌனம் உடுத்தி,
இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....

No comments:

Post a Comment

Thanks for reading..