விஞ்ஞானம்,
வகுத்த நிலவில்,
பாட்டியின் வடையோடு,
அறியாமை சுட்டு கொடுத்தீர் ...
அறியாமை சுட்டு கொடுத்தீர் ...
வயதில் பெரியோரை,
இகழ்ந்து பேசியபோது,
இளித்து கொண்டிருந்தீர்...
பக்கத்துக்கு வீட்டின்,
பேர் இரைச்சலை,
எதிர் வீட்டுடன்,
கூடி பேசி,
குதூகளித்தீர்...
புரிதலின்மையின்,
உச்சத்தில்,
அம்மாவின் கன்னங்களில்,
ஐந்து விரல் பதித்து,
ஆணாதிக்கம் போதித்தீர்....
மன்னிப்பு பற்றி வகுப்பெடுப்பீர்,
தவறிழைத்தால்,
தவறிழைத்தால்,
மதிய வெயில் தின்ன,
கால் மூட்டின் சதை கொடுப்பீர்...
வார்த்தைகளில்,
வார்த்தைகளில்,
இத்தலைமுறை,
குறைபாடுடன்,
பிரசவித்திருப்பதாய,
பிதற்றி கொள்கிறீர்கள்...
பிழை பிம்பம் கொண்டிருப்பினும்,
பிழை பிம்பம் கொண்டிருப்பினும்,
பிரதிபலித்த,
கண்ணாடிக்கு கண்டனம்,
கண்ணாடிக்கு கண்டனம்,
சர்வாதிகாரத்தின்,
ஒருவித சாயல்...
i think your father is a teacher, is right?
ReplyDeleteyes u r right... how did u know that?...
ReplyDeletestunning.. :-)
ReplyDeleteகவிதை அருமை...வாழ்த்துக்கள்.
ReplyDeletenanri aarumugam & kumar...
ReplyDeleteHey.Tamil kavithaigal balava nenga??
ReplyDeleteindha poem padichahdum than theriyudhu...
Keep going.. :))
thanks Ram:)
ReplyDelete