என் எழுத்துக்களில் பயணிக்கிற போது, தற்செயலாக பிரமிப்பான இடங்களை சந்திப்பதுண்டு, அதற்காகவே எழுத எத்தனிக்கிறேன் என்னை ....
Wednesday, July 1, 2009
துரோக வில்...
தன்னினம்,
தடையின்றி தழைக்க,
விடையின்றி வாழும்,
விருட்சகங்கள்,
போராளி..
தன் மக்களின்,
உணர்வு இசைப்பதற்காய்,
இவன் கைகள்,
மீட்டிய வீணைகள்,
துப்பாக்கிகள்..
தன் மாணுடத்தின்,
உரிமை பிறப்பதர்க்காய்,
இவன் தேகம்,
வருடிய கண்ணிகள்,
வெடிகள்...
தோழமைகள்,
பகல் பார்பதற்காய்,
இருளில் இரட்சிக்கும்,
இவர்கள்,
இறந்துபடுவது,
நிச்சயம் இருக்காது,
தோட்டாக்களால்...
தன் இனம்,
தீகிற பொழுது,
மனம் நோகுவதாய்,
தினம் நடித்தவன்...
கொன்று குவித்து,
பாஸ்பரஸ் உண்ண,
களித்தவன்...
ஊழ்வினையை,
ஊதி தீர்த்தவன் என....
கர்ணனின் கதையாய்,
துளைத்திருக்ககூடும்,
துரோக வில்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks for reading..